Monday, February 19, 2007

நிலவே என்னிடம் நெருங்காதே - நீ
நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே - நீ
மயங்கும் வகையில் நான் இல்லை (நிலவே)

கோடையில் ஒரு நாள் மழை வரலாம் - என்
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம் - என்
பாதையில் இனிமேல் சுகம் வருமோ (நிலவே)

ஊமையின் கனவை யாரரிவார் - என்
உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
ஓடிய மேகம் கலையுமுன்னே - நீ
பாடி வந்தாயோ வெண்ணிலவே (நிலவே)

அமைதியில்லாத நேரத்திலே - அந்த
ஆண்டவன் எனையே படைத்துவிட்டான்
நிம்மதி இழந்தே நானலைந்தேன் - இந்த
நிலையில் உன்னை ஏன் தூதுவிட்டான் (நிலவே)

No comments: